Wednesday - 14th of May 2008

Home | About Us | Suggest this page | Feedback

Amparai
Batticaloa
Jaffna
Kilinochchi
Mannar
Mullaitivu
Puttalam
Trincomalee
Vavuniya
TC News:

ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொலை
[ புதினம் ][ May 13 18:12 GMT ]

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் (வயது 53) அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஈபிடிபி கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் பலவற்றையும் வகித்த இவர், 1998 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் களுத்துறைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் கைதிகளால் டக்ளஸ் தேவானாந்தா தாக்கப்பட்ட போது இவரும் தாக்கப்பட்டார். [ ]

TamilCanadian News Room - Top Image
Image Courtesy: AP
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இன்று இலங்கை நிலைவரம் ஆராய்வு!
[ சுடர் ஒளி ][ May 13 11:10 GMT ]

இலங்கையில் மனித உரிமை நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸில் இன்று ஜெனிவாவில் கூடி ஆராயவுள்ளது. உலக நாடுகளின் மனித உரிமை நிலைவரம் குறித்து மனித உரிமை கவுன்ஸில் மேற்கொள்ளும் வருடாந்த ஆய்வின் ஒரு பகுதியாக இது இடம்பெறவுள்ளது. [ ]


தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
[ தினக்குரல் ][ May 13 10:49 GMT ]

இந்தத் தேர்தலானது தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன பேதத்தை கட்டியெழுப்புவதாக அமைந்து விட்டது. அதை உறுதிபடுத்துவது போல் முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கம் பிள்ளையான், ஹிஸ்புல்லா என இருவரை வைத்து நாடகமாடுகிறது. இது தேர்தலாகவே இல்லை. அதற்கு பதிலாக இந்தத் தேர்தல் மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் சுமுகமாக வாழ முடியாமல் பேதங்களை ஏற்படுத்தும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. [ ]


டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு-யாழ்,சித்தமருத்துவபீட மாணவர்கள் சாதனை!
[ வீரகேசரி ][ May 13 10:38 GMT ]

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கான மருந்தை தாம் கண்டறிந்துள்ளதாக யாழ், பல்கலைகழகத்தின் சித்தஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை, தற்போது யாழ்பாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அந்த மாணவர்கள் அறிவித்துள்ளனர். யாழ்,மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கும் என நம்பப்படுகிறது. [ ]


ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
[ தினக்குரல் ][ May 12 11:24 GMT ]

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் நடைபெற்ற மோசடிகளும், வன்முறைகளும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதுடன், எதிர்வரும் மனித உரிமை பேரவை அமர்விலும் இந்த விடயங்கள் எதிரொலிக்குமென்று மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து குறிப்பிட்டார். [ ]
  »  தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு - தினக்குரல்
  » தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு - தினக்குரல்
  » பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல் - தினக்குரல்


அதிக அட்டூழியங்களோடுஅரங்கேறும் தேர்தல் இது!
[ சுடர் ஒளி ][ May 11 14:29 GMT ]

பெரும் உள்நாட்டு யுத்தமாக வெடித்திருக்கும் இலங்கை இனப்பிரச்சினை இப்போது சூடுபிடித்து உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. யுத்தம் தீவிரமடைந்திருப்பதுபோல யுத்தப் பிரசாரமும் உச்ச ஸ்தாயியை எட்டியிருக்கின்றது. யுத்தத்தில் சாதிக்கப்படாதவை எல்லாம் யுத்தத்தை ஒட்டிய பிரசாரத்தின் மூலம் சாதிக்கப்பட்டவை போல விஸ்வரூபமாக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. நிஜத்தில் விடயங்கள் நடக்கின்றனவோ, இல்லையோ"நாளொரு சாதனை, பொழுதொரு வெற்றி' என்ற முழக்கங்கள் மட்டும் எந்நேரமும் கேட்டபடி இருக்கின்றன. [ ]


ஊடகங்களுக்கு எதிராக அரசு தொடுத்துள்ள யுத்தம்!
[ தினக்குரல் ][ May 11 14:25 GMT ]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான பாரியதொரு இனவாத யுத்தத்தை தீவிரமாக முன்னெடுத்து அதற்கு ஊடாக தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துவரும் அதேவேளையில் உண்மை நிலைவரங்கள் வெளியேவரக்கூடாது என்பதற்கான ஊடக சுதந்திரத்திற்கு எதிரான பாரியதொரு யுத்தத்தை மறுபுறத்தில் நடத்தி வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. [ ]


திருமலை துறைமுகத்தில் கற்படை கப்பல் மூழ்கடிப்பு!
[ வீரகேசரி ][ May 10 10:41 GMT ]

திருகோணமலை அஸ்ரவ் துறைமுக பகுதியில்,ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றபட்ட நிலையில், இலங்கை இராணுவத்தின் விநியோக கப்பல் இன்று அதிகாலை 2:23 மணியளவில் தாக்கி மூழ்கடிக்கபட்டுள்ளதாக விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலை புலிகள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:இலங்கை இராணுவத்தையும்,ஆயுதளபாடங்களையும்,ஏற்றி செல்லகூடிய படையினருக்கான வழங்கல் கப்பலான (Ex-vincibil A-520)என்ற கப்பல்,இன்று சனிக்கிழமை அதிகாலை 2:23 மணியளவில் தாக்கிமூழ்கடிக்கபட்டுள்ளது. [ ]


இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்
[ தமிழோசை ][ May 07 16:04 GMT ]

இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த். [ ]


அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு
[ வீரகேசரி ][ May 07 11:04 GMT ]

அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. [ ]


போர் வெறியூட்டலால் மயக்க நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள்
[ தினக்குரல் ][ May 07 10:56 GMT ]

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஜனநாயகத்தின் பேரிலானதொரு மோசடி, கிழக்கில் அரசாங்கம் தனது பேரினவாத ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டுள்ள பகீரதப் பிரயத்தனம் என ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். வடக்கைப் பொறுத்தவரை அங்கே தற்போது தேர்தல் நாடகம் மேடையேற்ற முடியாத நிலைமையில் ஒரு இடைக்கால சபை நிறுவப்பட வேண்டுமென முன்னர் அரச தரப்பினரால் முடிவு எடுக்கப்பட்டது. [ ]


கொழும்பு எதிர்கொள்ளும் இருமுனை நெருக்குதல்
[ உதயன் ][ May 13 10:54 GMT ]

போர்வெறித் தீவிரத்தில் நிற்கும் இலங்கை அரசு, நாட்டின் பொருளாதாரச் சீரழிவு நிலை குறித்து சிந்திப்பதாகவே இல்லை. நாட்டின் பொருண்மியம் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. புலிகளுடனான போரியல் சவாலை ஒரு முனையில் எதிர்கொள்ளும் கொழும்பு அரசுத் தலைமை மறுமுனையில் மோசமான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. இவ்வாறு தான் முகம் கொள்ளும் இருமுனை நெருக்குதலை கொழும்பு எப்படிச் சமாளிக்கப்போகின்றது? காலம் விரைவில் பதில் சொல்லும். [ ]


முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை முதலமைச்சராக்குவது பற்றி அரசாங்கம் ஆராய்வு
[ ஐ.என.எல் செய்திகள் ][ May 13 10:44 GMT ]

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.மோனகுருசாமியை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிஸ்புல்லா மற்றும் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்காமல், இவர்களுக்கு இடைப்பட்ட நபர் ஒருவரை நியமிப்பது பற்றி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. [ ]


கிழக்கில் ஜனநாயகப் படுகொலை
[ உதயன் ][ May 12 11:28 GMT ]

"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பொய்த் தந்திரோபாய சுலோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றியபடி தமிழர்களைக் கொன்றொழிக்கும் அரச பயங்கரவாதத்தை வெற்றிகரமாகத் தொடரும் கொழும்பு அரசு, அதேபோல, இப்போது இந்த ஜனநாயக மோசடித் தேர்தலையும் ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெரு வெற்றியாகப் பிரசாரப்படுத்தி, முன்நிறுத்த முயலும் என்பது திண்ணம். ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் கொழும்பின் அரச பயங்கரவாதத்தைக் கண்டும், காணாமலும் இருந்து,மௌனம் சாதித்து, அத்தவறுக்கு இடமளித்து, பெரும் குற்றமிழைக்கும் சர்வதேச சமூகம், இலங்கை அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையின் பிறப்பாக்கமாக உயிர்ப்பித்த இத் தேர்தல் முடிவு தொடர்பான அரசின் வெற்றிப் பிரகடனத்தையும் மௌனத்தோடு ஏற்று அங்கீகரிக்கும் என்பது உறுதி. [ ]


மன்னார் கரையோரத்தை கைப்பற்ற படையினர் திட்டம்
[ தினக்குரல் ][ May 11 14:30 GMT ]

வடக்கே மன்னாரை மையப்படுத்தியே போர் தொடர்கிறது. வவுனியா, மணலாறு, யாழ். குடாவில் படை நடவடிக்கைகளுக்கு பலத்த பின்னடைவுகள் ஏற்பட்ட நிலையில் மன்னார் களமுனையில் மட்டுமே சில வெற்றிகள் கிடைத்தன. எனினும் மடுவைக் கைப்பற்றிய பின்னரும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மடுத் தேவாலயத்திற்கு படையினர் சென்ற போது அங்கு மாதா சொரூபம் இருக்கவில்லை. [ ]


போர் நிறுத்தத்தை விரும்பாத தேர்தல் முடிவுகள்
[ தினக்குரல் ][ May 11 14:26 GMT ]

இன்றுடன் இக்கட்டுரைகள் ஆரம்பமாகி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. மக்களின் வரவேற்பைப் பெறுமோ இவை என்று சந்தேகித்து நின்ற எனக்குப் பல இடங்களில் இருந்து, பல தரப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள், பயனுள்ள விமர்சனங்கள் ஆகியன என் மனதுக்கு இதம் ஊட்டுகின்றன. இவற்றிற்கு அத்திவாரம் நாட்டிய "தினக்குரல்" ஆசிரியருக்கு மேலும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கின்றேன். இக் கட்டுரைகள் விரைவில் முற்றுப் பெறுவன என்பதையும் இத்தால் கூறி வைக்கின்றேன். [ ]


மேற்குலகின் பொறுப்பற்ற போக்கு
[ உதயன் ][ May 11 08:00 GMT ]

இலங்கையில் மிகவும் மோசமடைந்துவரும் இனப் பிரச்சினை விவகாரத்தில் சர்வதேச சமூகம் மிகவும் மெத் தனப் போக்கில் செயற்பட்டு வருகிறது எனக் கனேடிய ஏடான ""த ஸ்ரார்'' தனது தலையங்கத்தில் குற்றம் சுமத் தியிருக்கின்றது. தமிழர் தரப்பை விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்கும் யுத்த வெறியோடு ஒரு போர் தமிழர் தேசம் மீது தொடுக்கப்பட்டிருக்கின்றது. [ ]


சிறீலங்கா கடற்படையின் துருப்புக்காவி ஏ-520 கப்பல் விடுதலைப் புலிளால் மூழ்கடிப்பு
[ பதிவு ][ May 10 00:14 GMT ]

சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான துருப்புக்காவியான ஏ-520 கப்பல் ஒன்று விடுதலைகளின் கடற்கரும்புலி அணியின் நீரடி நீச்சல் சிறப்புப் பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 2.23 மணியளவில் திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்தில் கடற்புலிகளின் கங்கைஅமரன் சிறப்புப் படையணி இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. [ ]


விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள்! - அதிர்ச்சியில் இலங்கை ராணுவம்
[ குமுதம் ரிப்போர்ட்டர் ][ May 07 14:51 GMT ]

ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது. [ ]


பாராளுமன்ற ஒத்திவைப்பு குறித்து:ஐ.தேசியகட்சி விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு
[ வீரகேசரி ][ May 07 10:58 GMT ]

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவால், பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒரு மாத காலத்துக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது தொடர்பாக,ஐ.தே.க.யினர் இன்று காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற கட்டிடதொகுதியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க-பாராளுமன்ற கூட்டதொடரை ஜனாதிபதி தன்னிச்சையாக ஒத்திவைத்துள்ளமை,பாராளுமன்றத்தை இழிவுபடுத்தும் செயலாகும். [ ]


தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் முயற்சிகளையே அரசாங்கம் மேற்கொள்கின்றது - சபையில் மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு
[ வீரகேசரி ][ May 06 21:32 GMT ]

சமாதான வலயங்களை உருவாக்குவதற்கு பதிலாக தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், [ ]