நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதிக்க எம்.பிகள் கோரிக்கை

[ தமிழ் மிரர் ][ Feb 03 11:09 GMT ]


இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றம் பூரணமாக விவாதிக்க வேண்டுமென தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கெரி மெக்கத்தி கூறியுள்ளார். இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைக்கும் அதன் சிபாரிசுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவதால் இதை ஒரு சில வாரத்தினுள் விவாதிக்க வேண்டுமென மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தின்போது மெக்கத்தி கூறினார். [ ]

Feature Image

TamilCanadian News Room - Top Image

Image Courtesy: TGTE

None

I

சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும்

உலக பொலிஸ்காரன் என அமெரிக...

I

காதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு

குத்துச் சண்டைக்குப் போய...

I

கலாமின் இலங்கை அவதாரம்!

மனிதகுலத்தையே உலுக்கிப்ப...

dfsd

 

Scarborough Paint Centre

 

safd

 

dfsd

'ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த ஆதரவு வழங்குவோம்'

[ வீரகேசரி ][ Feb 03 11:19 GMT ]

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் குறுகிய காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தக்கூடியவைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும் என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். [ full story | ]

அமெ.பாதுகாப்புக் குழு உண்மையைக் கண்டறிய கொழும்பு விஜயம்

[ உதயன் ][ Feb 03 11:16 GMT ]

அமெரிக்காவின் உலக அமைதி நடவடிக்கை அமைப்பின் வளங்கள் மதிப்பீட்டு அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு உண்மையைக் கண்டறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் பல்தேசியப் பயிற்சிப் பிரிவின் தலைவர் ஸ்கொட் வெய்டி, தலைமையிலான இந்தக் குழுவில் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். [ full story | ]

அடம்பிடிப்பதை விட்டுவிட்டுஅரசுடன் இணைந்து செயற்படுங்கள்; அரசியல்வாதிகளுக்கு பிரதமர் அழைப்பு!

[ உதயன் ][ Feb 03 11:10 GMT ]

சில அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையான விடயங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்காமல் தேவையற்ற விடயங்களுக்காக அடம்பிடிக்கின்றனர், அப் போக்கைக் கைவிட்டு அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறார் பிரதமர் டி.எம்.ஜயரட்ன. [ full story | ]

சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும்

[ வீரகேசரி ][ Feb 02 14:03 GMT ]

உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. [ full story | ]

குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே அமெரிக்காவுக்கு ஓடுகிறது அரசு; பிரேரணையைத் தடுக்கப் பிரயத்தனம்

[ உதயன் ][ Feb 02 13:58 GMT ]

அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றை நியூயோர்க்குக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது. [ full story | ]

நகரசபை தலைவரின் சகோதரர் வெள்ளை வானில் கடத்தல்

[ வீரகேசரி ][ Feb 02 13:51 GMT ]

கொலன்னாவை நகரசபை தலைவரின் சகோதரர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத சிலரால் இன்று கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 11.30 மணியளவில் மீதொட்டமுல்ல பகுதியில் வைத்து குறித்த நபர் கடத்தப்பட்டதாக கடத்தப்பட்டவரின் தாயார் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார். [ full story | ]

ஒரு போதும் தர விரும்பாததை பற்றி பேசி காலத்தை ஓட்டுகிறது அரசாங்கம் - மனோ

[ தமிழ் மிரர் ][ Feb 01 14:05 GMT ]

'13ஆவது திருத்தத்தின் கீழ் இருப்பதைக்கூட தராமல் கடும் போக்கில் இருக்கின்ற இந்த அரசாங்கம், தான் ஒரு போதும் தர விரும்பாத 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து காலத்தை ஓட்டுகிறது' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அப்படியானால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டுமா? இந்த பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும்? [ full story | ]

டெல்லியில் கோத்தபயா: இந்திய-இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

[ தற்ஸ் தமிழ் ][ Feb 01 13:34 GMT ]

இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே தலைமையிலான குழு டெல்லி வந்துள்ளது. இக்குழு இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இது ஆண்டுதோறும் நடைபெறும் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சக்திகாந்த் ஷர்மா தலைமையில் இந்தியக் குழு இலங்கை குழுவுடன் ஆலோசனை நடத்தியது. [ full story | ]

மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் திடீர் இராஜினாமா

[ வீரகேசரி ][ Feb 01 11:23 GMT ]

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான கலாநிதி ஆனந்த மென்டிஸே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பக்கச் சார்பற்ற விதத்தில், நியாயமான முறையில், அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த தீர்மானத்துக்கு வர நேரிட்டதாகத் தெரிவித்தார். [ full story | ]

இராணுவ ஆட்சி இருக்கும் வரை அரசியல் தீர்வு முயற்சி தோல்வியே!

[ உதயன் ][ Feb 01 11:18 GMT ]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்வு யோசனையை அந்தக் கட்சி முதலில் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதன்பிறகு நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றிப் பேசலாம் என்று நேற்று ஜே.வி.பி. கூறியுள்ளது.வடக்கு, கிழக்கில் தற்போது இடம் பெற்றுவரும் இராணுவ ஆட்சியை முற்றாக நீக்காதவரை எந்தவொரு அரசியல் தீர்வு முயற்சியும் வெற்றியளிக்காது. [ full story | ]

இலங்கைக்கு எதிராக தீர்மானம் - புதுடில்லிக்கு விரைந்தார் எரிக் சொல்ஹய்ம்!

[ வலம்புரி ][ Feb 03 11:17 GMT ]

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19-வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள் இந்தியாவின் ஆதர வைப்பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அவரது விஜயம் அமைந்துள்ளது. [ full story | ]

பொறுப்புடைமையும் நீதியும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து வராது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

[ தமிழ் மிரர் ][ Feb 03 11:15 GMT ]

இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புடைமையின்மை குறித்து, மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் ஆராயப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [ full story | ]

ஜெனீவா மாநாட்டுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு விசேட தூதுக்குழுவை அனுப்ப ஜனாதிபதி ஆர்வம்

[ தமிழ் மிரர் ][ Feb 02 20:03 GMT ]

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை முன்னேற்றுவதற்கு தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க தலைவர்களுக்கு விளக்குவதற்காக, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்ப வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. [ full story | ]

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காவிட்டால்தான் இரத்த ஆறு ஓடும்: பிக்கு முன்னணிக்கு பிரபா எம்.பி. பதில்

[ தமிழ் மிரர் ][ Feb 02 14:00 GMT ]

'காணி, பொலிஸ் அதிகாரங்களால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று தேசிய பிக்குகள் முன்னணி தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். அவரது மடமைத்தனத்தை அக்கருத்து வெளிப்படுத்துகிறது. அதிகாரப் பகிர்வு வழங்கப்படாவிட்டால் தான் இந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். [ full story | ]

தோற்றபோதில்லாப் பெருந்துயரை ஜனாதிபதியின் கூற்றினால் புலிகள் அடைந்திருப்பர்!

[ வலம்புரி ][ Feb 02 13:56 GMT ]

அரசின் பார்வையில் விடுதலைப்புலிகள் இறுக்கமான போக்கை கொண்டிருந்ததாகத் தென்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் இறங்கி - விட்டுக் கொடுத்து பேச்சுவார்த்தையை தொடர முடியுமோ அந்தளவிற்கு அவர்கள் இறங்கியுள்ளனர். ராஜபக்­ஷவின் நினைவு தினத்தில் கலந்து கொண்ட சம்பந்தர் ஐயா, அரசு மீதான போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என்று உரையாற்றிய சுமந்திரப் பெரியோன் இருக்கின்ற இடத்தைப் பார்த்தா? புலி போல என்று கூறுவது? சிவசிவா! புலிகள் இதைக் கேட்டால் போரில் அடைந்த துன்பத்தை விட பெருந்துன்பம் அடைவர். [ full story | ]

சிறை வைக்கப்பட்டாரா தா. பாண்டியன்?

[ குமுதம் ][ Feb 01 14:29 GMT ]

தா.பாண்டியன் உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை நடத்திய விதம்தான் ரொம்பக் கொடுமை. ‘உள்ளே நடந்த விஷயங்களை நீங்கள் வெளியே சொல்லக் கூடாது. நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அது தமிழர்களுக்கு இன்னும் கெடுதலாகிவிடும்’ என டி.ஆர்.பாலு திரும்பத் திரும்பச் சொல்லி தா.பாண்டியனை பிரதமர் அ லுவலகத்தின் உள்ளேயே உட்கார வைத்துவிட்டார். [ full story | ]

இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

[ தினகரன் ][ Feb 01 13:42 GMT ]

இலங்கையின் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் பலர் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் மீன் பிடித்ததால் தான் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், இதனால் போதிய மீன்பாடு இல்லை என்றும் கரை திரும்பிய ஒற்றை மடி மீனவர்கள் தெரிவித்தனர். [ full story | ]

காதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு

[ வலம்புரி ][ Feb 01 11:26 GMT ]

குத்துச் சண்டைக்குப் போய் காது அறுபட்டவரின் விடயத்தில் காட்டப்பட்ட கரிசனையைக் கேட்டபோது, எங்கள் மண்ணில் நடந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் பட்ட அவலங்கள், அங்கவீனங்களை நினைத்துப் பார்த்தேன்.கடவுளே! இரண்டு காலும் இல்லாதவர்கள் எத்தனை பேர்? கை இழந்தவர்கள், கண் இழந்தவர்கள், எழுந்து நடக்க முடியாதவர்கள் இப்படி பெரும் துயரத்தை அனுபவித்துக் கொண்டு குடிசைக்குள் குந்தியிருந்து சதா அழுகின்றவர்களை ஆட்சி பீடத்தினர் யாருமே பார்த்ததாக -அனுதாபம் தெரிவித்ததாக இல்லை. [ full story | ]

'தமிழ்க் கைதிகள் அனுபவிக்க நேர்ந்துள்ள பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும்'

[ தமிழ் மிரர் ][ Feb 01 11:20 GMT ]

'களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் கைதிகளை மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்ற சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அவர்கள் அனுபவிக்க நேர்ந்துள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண உரிய தரப்பினர் முன்வர வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், தேசிய சேவைச் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். [ full story | ]

போவோம் ஆனா போகமாட்டோம்

[ வீரகேசரி ][ Feb 01 11:17 GMT ]

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று தெரிவித்தார். ஜெனிவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.நா.வின் 19ஆவது மனித உரிமைகள் பேரவை மா நாடு இடம்பெறவுள்ளது. [ full story | ]

Notices
Featured News

[வீரகேசரி - Feb 02, 2012 14:03:20 GMT]

சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும்


[வலம்புரி - Feb 01, 2012 11:26:03 GMT]

காதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு


[ஜூனியர் விகடன் - Jan 30, 2012 22:54:47 GMT]

கலாமின் இலங்கை அவதாரம்!


[தமிழ் மிரர் - Jan 29, 2012 23:17:25 GMT]

மீண்டும் மிரட்டும் 'ஜெனிவா'


[உதயன் - Jan 29, 2012 13:01:38 GMT]

அப்துல் கலாமே அறிவீரோ!


[ வீரகேசரி - Jan 28, 2012 23:10:40 GMT]

செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள்


[வீரகேசரி - Jan 24, 2012 15:32:12 GMT]

மருத்துவ மனைகளின் இயக்கமின்றி வைத்திய சேவைக்கு ஏங்கும் வன்னி


[கீற்று - Jan 24, 2012 15:00:24 GMT]

தமிழர்களைக் குறிவைக்கும் புதிய இராணுவ நடவடிக்கை


[தமிழ் மிரர் - Jan 23, 2012 19:07:54 GMT]

மற்றொரு இந்திய தலைவரின் விஜயமும் மற்றொரு முறை அதே வாக்குறுதிகளும்


[வீரகேசரி - Jan 23, 2012 13:57:06 GMT]

இந்திய - இலங்கை நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் கிருஸ்ணாவின் வருகை!


[தமிழ் மிரர் - Jan 23, 2012 13:56:02 GMT]

த.தே. கூட்டமைப்பு மீதான கோபம் நியாயமானதா?


[வீரகேசரி - Jan 19, 2012 19:51:42 GMT]

13 ஆவது திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலான தீர்வும்


[வீரகேசரி - Jan 19, 2012 14:16:47 GMT]

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரமென்ன?


[வீரகேசரி - Jan 17, 2012 18:54:43 GMT]

போர்க்குற்ற விசாரணையில் அமெரிக்கா தலையிடுமா?


[வீரகேசரி - Jan 17, 2012 12:57:32 GMT]

ஓட்டுமொத்த தமிழினத்தின் அரசியல் உணர்வை ‘நலமடிக்க’ தென்னிலங்கையில் வியூகம்