யாழ்பாணத் தேர்தல்-தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க கோரிக்கை
[ தற்ஸ் தமிழ் ][ Jul 03 10:34 GMT ]
யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் படைப்பாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தடி சாக்கடியில் ராஜபக்சேயின் அரசு போலவே போர் வெற்றியை வெடிகொளுத்திக் கொண்டாடிய ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழர்கள் மடையர்கள் என்ற எண்ணத்தில் தேர்தலில் குதித்துள்ளது. [  ]
தன்னிலை இழந்த அரசியல் தலைமை
[ இணைய உலகம் ][ Jul 03 04:51 GMT ]
மானமும், அறிவும் மாந்தரின் அடையாளம் என்றார் பெரியார். அப்படியே நின்றார், போராடினார், வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் வழி வந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் - விதிவிலக்கில்லாமல் அனைவரும் - பெரியார் ஊட்டிய அறிவையும், தமிழரின் மானத்தையும் அடக்கு வைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை சிங்களவன் நன்கு உணர்ந்துள்ளான். அதனால்தான் கூறினான் “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் கோமாளிகள்” என்று. [  ]
அகதிகளை விரைவில் மீளக்குடியமர்த்தசர்வகட்சி கூட்டத்தில் ஜனாதிபதி உறுதி வடக்கு-கிழக்கு அபிவிருத்திப் பணிக்கு ஒத்துழைக்க கூட்டமைப்பு இணக்கம்
[ உதயன் ][ Jul 03 04:37 GMT ]
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கி யுள்ள மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று, நேற்று நடந்த சர்வகட்சிப் பிரதி நிதிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித் திருக்கின்றார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்திக்கும் நல் லிணக்கத்துக்குமான சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் கலந்துகொண்டனர். வடக்குகிழக்கு அபிவிருத் திப் பணிகளை அரசு முன்னெடுத்தால் அதற்குத் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவர் என அவர்கள் தெரிவித்தனர். [  ]
மற்றொரு சர்வகட்சிக் குழு உதயம்
[ உதயன் ][ Jul 02 13:07 GMT ]
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அப்பால் அபிவிருத்தி குறித்தும் இந்தப் புதிய கட்டமைப்பு ஆராயவிருப்பதாகக் கூறப்படுவது முக்கியமானது. யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பேரழிவுகளைச் சந்தித்து நிற்கும் தமிழர் களின் அவசர, அவசிய மனிதாபிமானத் தேவைகளை யும், உடனடி எதிர்பார்ப்புகளையும் பூரணமாக நிறைவு செய்யும் பணிக்கு இந்தப் புதிய அமைப்பு முக்கியத்துவம் கொடுக்குமானால் அது சாலச்சிறந்ததே. [  ]
இன்றைய சர்வக்கட்சிக் குழுக் கூட்டத்தில் த.தே.கூ. பங்கேற்கும் : அரியநேத்திரன்
[ வீரகேசரி ][ Jul 02 13:00 GMT ]
ஜனாதிபதியின் அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான சர்வ கட்சி குழு இன்று முதல் தடவையாகக் கூடும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதில் கலந்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெறவிருக்கின்றது. [  ]
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் தான் தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும்: உருத்திரகுமாரன்
[ புதினம் ][ Jul 02 12:54 GMT ]
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் அமைப்புக்கள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். [  ]
இலங்கையில் சிங்களவருடன் இணந்து ஒரு 'தமிழர் அரசு' : சட்டசபையில் இன்று முதல்வர் உரை
[ வீரகேசரி ][ Jul 01 11:54 GMT ]
இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு 'தமிழர் அரசை' அமைக்கும் நிலை உருவாகலாம்" என்று முதல்வர் கருணாநிதி கூறினார். [  ]
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் யாரும் மனுத்தாக்கல் செய்யலாம்
[ லங்கா தகவல் நிறுவனம் ][ Jul 01 11:46 GMT ]
இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த பொதுமக்கள் மரணங்கள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமே முதற்கட்ட விசாரணை நடத்தவேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இணைந்துகொண்ட சிலி தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளை இலங்கை அரசாங்கத்தால் நடத்தமுடியாவிட்டால் விசாரணைகள் தொடர்பில் எந்தவொரு நாடோ, எந்தவொரு நபரோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையைக் கோரமுடியுமென அந்த நாடு சுட்டிக்காட்டியுள்ளது. [  ]
மீள்குடியேறிய பின்னரும் முல்லைத்தீவில் இராணுவப் பிரசன்னமிருக்கும்
[ லங்கா தகவல் நிறுவனம் ][ Jun 30 04:21 GMT ]
வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட பின்னரும், அந்தப் பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். தற்போது கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் அமைக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கும் இராணுவப் பேச்சாளர், இந்த இராணுவத் தலைமையகங்களின் கீழ் முகாம்கள் அமைக்கப்படுமெனவும் கூறினார். [  ]
புலி சந்தேகநபர்கள், ஆதரவாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஏற்பாடு
[ தினக்குரல் ][ Jun 30 03:55 GMT ]
விடுதலைப்புலி சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஏற்பாடுகளுக்கான விதிமுறைகள் அரசாங்கத்தின் சட்ட வரைபு திணைக்களங்களால் தயாரிக்கப்படுகின்றன. தாழ்ந்த மட்டத்திலான புலி உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்தத் தண்டனை விலக்கு ஏற்பாடுகள் பிரயோகிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. [  ]
|
திராவிட நாடும் -திமுகவின் பதவி சுகமும்-நெடுமாறன்
[ தற்ஸ் தமிழ் ][ Jul 03 04:58 GMT ]
தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கையை திமுக குழி தோண்டி புதைத்தது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாகத் தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக முதல்வர் கருணாநிதி கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். [  ]
ராஜீவ் கொலை: பிரபாகரன் வழக்கின் நிலை என்ன? காங்கிரஸ் எம்.எல்.ஏ கேள்வி
[ தினமணி ][ Jul 03 04:46 GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீதுள்ள வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கேள்வி எழுப்பினார். இலங்கையில் பிரபாகரன் இறந்துவிட்ட நிலையில், அவரது இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டதா? பிரபாகரன் மீதான வழக்கு முடிக்கப்பட்டதா என்பதை இந்த அவைக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். [  ]
கருணாநிதியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது : ராமதாஸ்
[ இணைய உலகம் ][ Jul 02 13:12 GMT ]
இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பது உண்மை என்றாலும் அதற்காக சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். [  ]
மோதல் தீர்வு தொடர்பாக அசே யிடமிருந்து கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டும் இலங்கை
[ தினக்குரல் ][ Jul 02 13:01 GMT ]
இந்தோனேசியாவின் அசே மாகாணம் மோதலுக்கு தீர்வு கண்டது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வதில் இலங்கை ஆர்வம் காட்டியுள்ள அதேசமயம், நேரடியாக அந்த விடயங்களை அறிந்துகொள்வதற்காக சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அசே மாகாணத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். [  ]
முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக த அவுஸ்ரேலியன் நாளேடு தகவல்
[ தமிழின் வெற்றி ][ Jul 02 12:58 GMT ]
வன்னியில் இருந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், , அரசாங்க அதிகாரிகளினால் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக த அவுஸ்திரேலியன் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அங்கு பணியாற்றும் தொண்டு பணியாளர்கள் தமது ஊடகத்திற்கு தெரிவித்ததாக அதன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. [  ]
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[ சுவிஸ் முரசம் ][ Jul 01 11:59 GMT ]
இந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். [  ]
சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையம்: ஒபாமாவுக்கு மனித உரிமை அமைப்புக்கள் முறையீடு
[ புதினம் ][ Jul 01 11:49 GMT ]
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. [  ]
நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அரசாங்கம் தற்போது தன்வசம் வைத்திருப்பது என்ன?
[ தினக்குரல் ][ Jun 30 11:22 GMT ]
இலங்கையில் மோதலை அதிகரிக்கச் செய்ததற்கான பல துன்பங்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கத்தை எட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் தற்போது எதனை வைத்திருக்கின்றது என்பதே கேள்வியாகும் என்று ஜோர்க் வாஷிங்டனிலுள்ள சிகுர் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தீபா ஒலப்பல்லி தெரிவித்திருக்கிறார். [  ]
யுத்த நிறுத்த ஒப்பந்தமே பிரபாகரனைக் கொன்றதுஉரிமை கோரி மார்தட்டுகிறது ஐ.தே.க.
[ உதயன் ][ Jun 30 04:15 GMT ]
புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமே புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலைக்குக் காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் எம்.பி. வஜிர அபய வர்தனவே இவ்வாறு கூறினார். [  ]
இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்
[ இணைய உலகம் ][ Jun 30 03:42 GMT ]
ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect - R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. [  ]
|