எந்த விசாரணைக்கும் ஐ.நாவுக்கோ சர்வதேசத்துக்கோ இடமளியோம்: சம்பிக
[ வீரகேசரி ][ Mar 09 10:36 GMT ]
இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்க மாட்டோம். இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளமைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். [  ]
வெளிநாட்டில் செயற்படும் புலிகளின் அமைப்புகள் தமது தலைவர் பிரபாகரனைத் தேடும் முயற்சியில்! இலங்கைத் தரப்பு கவலையுடன் இந்தியாவிடம் தெரிவிப்பு
[ உதயன் ][ Mar 09 10:33 GMT ]
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள அந்த இயக்கத்தின் முன்னணி அமைப்புகள் ஈடு பட்டுள்ளன எனக் கவலை வெளியிட் டுள்ள இலங்கை, அதனை இந்தியாவிற் கும் தெரியப்படுத்தியுள்ளது. [  ]
முக்கிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் பங்கு அவசியம்: அமெரிக்கா
[ தினமணி ][ Mar 07 05:22 GMT ]
உலகப் பொருளாதார மந்த நிலை, பருவ நிலை மாற்றம், ஆயுதப் பரவல் தடுப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்ற முக்கிய பிரச்னைகளை எதிர் கொள்ள இந்தியாவின் பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா சபையில் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது இரு நாடுகளும் ஒத்தக் கருத்துடன் செயல்பட்டு வருகின்றன. [  ]
நிபுணர் குழுவை நியமிப்பது நியாயமற்றது
[ வீரகேசரி ][ Mar 07 03:59 GMT ]
ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படுவது கோரப்படாததும் நியாயமற்றதுமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. [  ]
நிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு
[ வீரகேசரி ][ Mar 06 11:43 GMT ]
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இச்சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கூறியுள்ளார். [  ]
மகிந்தவைச் சந்திக்கப் இந்தியக் கலைஞர்கள் போட்டி
[ வீரகேசரி ][ Mar 06 05:36 GMT ]
மஹிந்தவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது இந்தச் சந்திப்பிற்கு இந்து ராம் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் ரவிசங்கர் மகிந்த றாஜபக்சவை அலரி மாளிகையில் நேற்றைய தினம் சந்தித்திருக்கிறார். [  ]
போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை : நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து
[ வீரகேசரி ][ Mar 05 10:33 GMT ]
போர்க் குற்றங்கள் தொடர்பில்,சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். போரின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைக்கு இணங்கவேண்டும். அத்துடன் இதற்காக சர்வதேச நாடுகளும் உதவ முடியும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். [  ]
நிருபமா ராவின் இலங்கை விஜயம்
[ உதயன் ][ Mar 04 10:27 GMT ]
தமிழர் தரப்பில் அதிக பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, "இந்தியாவின் எடு பிடியாகி விட்டது, புதுடில்லியில் ஏவல் நாயாகிவிட்டது' என்றெல்லாம் கூட்டமைப்புக்கு எதிராகக் கடும் பிரசாரங் கள் சில தரப்புகளினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் சமயத் தில் நிருபமா ராவ் அம்மையார் கொழும்பு வருகின்றார். [  ]
தவறு செய்யும் சாமியார்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை!
[ குமுதம் ][ Mar 04 10:16 GMT ]
தவறு செய்யும் சாமியார்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தாலும், இதுபோன்ற தவறுகள் நடைபெற்றுவருவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். [  ]
இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஸ்யா இணக்கம்
[ வீரகேசரி ][ Mar 03 10:06 GMT ]
இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ரஸ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. காஸ்புரும் என்ற நிறுவனத்தின் ஊடாகவே இந்த எரிபொருள் விநியோகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [  ]
|
இராணுவ நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் குழுவை ஜனாதிபதி அல்லது இராணுவ தளபதி நியமிப்பார்
[ வீரகேசரி ][ Mar 09 10:33 GMT ]
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார் அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் இராணுவ தளபதி நியமிப்பார் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [  ]
வட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் : நிருபமாவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
[ வீரகேசரி ][ Mar 08 10:12 GMT ]
"நாட்டில் சமாதானம் நிலை நாட்டப்பட்டதன் பின்னர் மக்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதற்கு நாடளாவிய ரீதியில் முதல் தடவையாக தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அந்த தேர்தலில் பங்கு பற்றுவதற்கென அவர்கள் மிகுந்த உற்சாகத்தைக் காண்பித்து வருகிறார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [  ]
இலங்கை விவகாரத்தில் பான்கீ மூன் மெதுவாக செயற்படுவதற்கு ஐ.நா அங்கத்துவ நாடுகளின் அழுத்தமே காரணம்
[ வீரகேசரி ][ Mar 07 04:00 GMT ]
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மெதுவாக செயற்படுவதற்கு ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் அழுத்தமே காரணம் என ஐக்கிய நாடுகளுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜெரார்ட் ஆரூட் தெரிவித்துள்ளார். [  ]
குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்....
[ உதயன் ][ Mar 06 13:46 GMT ]
காமாலைக் கண்ணணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல இலங்கை அரசும், அதன் அமைச்சரும் பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்துகளைப் பார்த்தால், நோக் கினால் யார் என்ன செய்யமுடியும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதன் அர்த்தமும் இங்கே மிகப் பொருந் துகிறது. தமிழ் மக்களுக்குரிய பிறப்புரிமைகளை, அவர் களின் பிரிக்கமுடியாத அரசியல் உரிமைகளை வழங்கி னால் இந்தக் குறுகுறுப்புகள் நீங்கியும், நீர்த்தும் போய் விடும் அல்லவா? [  ]
தாயகக் கொள்கையை பிரி.வாழ் தமிழர்கள் ஆதரிக்கலாம் ஆனால் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது சட்டவிரோதம்
[ உதயன் ][ Mar 06 05:47 GMT ]
தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை களுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதை யும் அவர் வலியுறுத்தியுள்ளார். [  ]
நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு
[ வீரகேசரி ][ Mar 06 04:46 GMT ]
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், அரசாங்கம் சுயாதீனமான விசாரணையை நடத்தவேண்டும் என நேற்று முன் தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார். இவரது சுயாதீன விசாரணை கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [  ]
உலகத் தமிழர் மாநாட்டில் மில்லிபாண்ட்; இலங்கையின் இறைமைக்குப் பங்கம்! கடும் சீற்றத்தில் அரசாங்கம்
[ உதயன் ][ Mar 05 02:54 GMT ]
கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கலந்துகொண்டமை மாபெரும் குற்றம் என்று இலங்கை அரசு கண்டித்துள்ளது. மில்லிபாண்ட் அங்கு வெளி யிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடு என்றும் சீற்றத்துடன் கண்டித்துள்ளது. [  ]
இலங்கையைப் பிரிக்க மேற்குலக நாடுகள் முயற்சி : அரசாங்கம்
[ வீரகேசரி ][ Mar 04 10:23 GMT ]
"பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று" ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். [  ]
மீள்குடியேற்றமாக மாறியுள்ள சிங்கள குடியேற்றம்
[ வீரகேசரி ][ Mar 04 10:13 GMT ]
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரின் முள்ளிக்குளத்திலுள்ள 1000 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இங்கு சுமார் 1000 கடற்படைக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [  ]
புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு
[ உதயன் ][ Mar 03 10:05 GMT ]
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது தமக்குள்ள உறுதியைப் புலம்பெயர் தமிழர்கள் ஜனநாயக முறை யில் வெளிப்படுத்தி வருகின்றமையை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதும் ஒரு காரணமாகும். மேற்குலகுக்குப் புரிந்த இந்த விடயம் இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு விளங்காமல் இருப்பது அல்லது விளங்காதமைபோலக் கதை விடுவது விந்தையே! [  ]
|