முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் நாம், அதற்கேற்றபடி அரசியலை நகர்த்தக்கூடியவர்களாக இருக்கவேண்டும். எமக்குள் ஒற்றுமைப்பட்டு முள்ளிவாய்க்கால் சொல்லித்தந்தவற்றை சரிவர உணர்ந்து செயற்படாது போகுமிடத்து அதாவது பலவீனங்களை பலப்படுத்துவதோடு கட்டமைக்கப்பட்ட செயற்றிட்டத்தின் ஊடாகப் பயணிக்காவிடின் எமக்கான இலக்கு நீண்டதூரத்திலேயே இருக்கும். அதைவிடுத்து எந்த ஏக்கத்துடன் தமிழர்கள் மாண்டார்களோ அதை நிறைவேற்றுவதே தமிழ் மக்கள் அவர்களுக்குச் செய்யும் ஆத்மார்த்த அஞ்சலியாக அமையும். இவ்வளவு இழப்புக்களுக்கு பின்னும் அதன் தாற்பரியத்தை உணராதவர்களாகவே எமது சமூகம் இன்றும் இருக்கின்றது. [
]
Image Courtesy: Uthayan
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. [ full story | ]
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்துள்ளார். [ full story | ]
இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.இலங்கை ஆதி முதலே தமிழ் மக்கள் வாழ்ந்த நாடு. இதை மகாவம்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. விஜயன் கபடத்தனமாக அவனது மாமன்மாரை கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றினான். சிங்களவர்களும் 2500 வருடங்களாகவே இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. அதேபோல 200 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டுக்கு கொண்டு வந்து குடியேற்றப்பட்ட இந்திய தமிழர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. [ full story | ]
"எமது உறவுகளை படுகொலை செய்தவர்கள் அதற்கான தண்டனையை என்றோ ஒருநாள் பெற்றே தீர வேண்டும். நிச்சயமாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐ.நா. பரிந்துரைக்கின்ற போது எங்களுக்கான விடுதலையும் நெருங்கிவிடும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். [ full story | ]
இலங்கையின் இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் வடமாகாணத்தின் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. [ full story | ]
தமிழர் வாழ்வில் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் பெருமெடுப் பில் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட வுள்ளது. [ full story | ]
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை சனிக்கிழமை வடமாகாணத்தில் அனுஷ்டிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முண்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஏற்பாட்டில் நாளை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். [ full story | ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. [ full story | ]
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்க விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார். [ full story | ]
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது. இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது. [ full story | ]
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருந்த பிரேரணைக்கு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவு தெரிவித்ததுடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. [ full story | ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. [ full story | ]
"வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச் செய்து கொப்பேகடுவவுக்கு வாக்களித்து அவரை வெற்றிப்பெறச் செய்தனர்.'' இவ்வாறு காலிமுகத்திடலில் இடம் பெற்ற போர் வெற்றியின் நான்காண்டுகள் நிறைவிழா கொண்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். [ full story | ]
அரசாங்கம் யுத்த வெற்றியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனை விடுத்து யுத்த வெற்றி விழாக்களை கொண்டாடுவதனால் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம் தெரிவித்தார். அரசின் சமகால முன்னெடுப்புகள் குறித்து கருத்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். [ full story | ]
அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கும்போது மேடைகளில் பிரபாகரன் படம் போடப்பட்டிருந்தது.அப்போது பிடித்தது இப்போது பிடிக்கவில்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே என ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவரும், பிரிவினைவாத இயக்கத் தலைவருமான யாசின் மாலிக் கூறியுள்ளார். [ full story | ]
வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். [ full story | ]
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். [ full story | ]
முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசு தற்போது ஆயிரத்து 500 சிங்களக் குடும்பங்களை அங்கு அழைத்து வந்து குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். [ full story | ]
ஆர்ப்பாட்டங்கள் மூலமோ அழுத்தங்கள் மூலமோ அர சாங்கத்தை வீழ்த்த முடியாது. அரசாங்கம் மிகுந்த பலம் வாய்ந்ததாக உள்ளதென பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பெரிதாக எதையோ சாதிக்கப் போவதாக எண்ணி 15 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிந்தது போலவே 21 ஆம் திகதிய எதிர்ப்பு நடவடிக்கைகளும் புஷ்வாணமாவது உறுதியெனவும் அமைச்சர் தெரிவித்தார். [ full story | ]
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. [ full story | ]
Downing Street backs 2014 Glasgow invitation to Sri Lanka
Norway tells Lanka: Respect Vienna Convention
Russia to donate eight helicopters to SL
[உதயன் - May 19, 2013 13:10:11 GMT]
[வீரகேசரி - May 19, 2013 13:05:30 GMT]
[உதயன் - May 17, 2013 10:05:19 GMT]
[வீரகேசரி - May 17, 2013 10:01:30 GMT]
[தமிழ் மிரர் - May 17, 2013 9:59:26 GMT]
[வீரகேசரி - May 16, 2013 9:58:24 GMT]
[உதயன் - May 15, 2013 10:16:04 GMT]
[பொங்கு தமிழ் - May 15, 2013 10:08:19 GMT]
[வீரகேசரி - May 14, 2013 10:00:38 GMT]
[தமிழ் மிரர் - May 14, 2013 9:55:19 GMT]
[தமிழ் மிரர் - May 13, 2013 10:22:52 GMT]
[தினக்கதிர் - May 12, 2013 11:08:53 GMT]
[BBC தமிழோசை - May 12, 2013 10:33:20 GMT]
[உதயன் - May 11, 2013 10:48:09 GMT]
[உதயன் - May 11, 2013 10:39:19 GMT]