Tuesday - 09th of February 2010

Home | About Us | Suggest this page | Feedback

Amparai
Batticaloa
Jaffna
Kilinochchi
Mannar
Mullaitivu
Puttalam
Trincomalee
Vavuniya
TC News:

ஜெனரல் சரத் பொன்சேகா கைது
[ வீரகேசரி ][ Feb 09 02:23 GMT ]

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். [ ]
  » ஜெனரல் சரத் பொன்சேகா கைது! - உதயன்

Image Courtesy: TCNR
அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்
[ தினக்குரல் ][ Feb 09 02:32 GMT ]

இலங்கை மக்களின் நினைவாற்றலைப் படுமோசமாகக் குறைத்து மதிப்பிடுபவர்கள் என்றால் அது எமது அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. மக்களுக்கு இருக்கக்கூடிய விவேகத்தை நிந்தனை செய்வதிலும் அவர்கள் ஒருவித வக்கிரமான திருப்தியை அடைகிறார்கள் போலத் தோன்றுகிறது. [ ]


பேச்சுக்கு அரசு அழைத்தால் கூட்டமைப்பு அதற்குத் தயார்
[ உதயன் ][ Feb 09 02:25 GMT ]

இனப் பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அழைப்பு விடுப்பாரானால், அதனைச் சாதகமாகப் பரிசீலிக்கத் தாங்கள் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி எமது கட்சியை அழைத்துத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்துள் ளார். மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சி னைகளில் நாம் பேசவேண்டிய சந்தர்ப்பம் வந்தால், அது தொடர்பாகப் பேசுவதற்குத் தயாராகவே உள்ளோம். [ ]


சரத் பொன்சேகா திடீர் கைது
[ BBC தமிழோசை ][ Feb 08 20:57 GMT ]

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று, திங்கட்கிழமை இரவு, கொழும்பில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். [ ]


ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்
[ வீரகேசரி ][ Feb 08 11:03 GMT ]

ஊடக அடக்கு முறைக்கு எதிராக இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. [ ]


தமிழர்களே தமிழைப் புறக்கணிப்பார்களேயானால் தமிழ்மொழி உரிமையை நிலைநாட்டுவது எவ்வாறு?
[ தினக்குரல் ][ Feb 07 08:39 GMT ]

தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாக விளங்குகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது தமிழ் மொழிக்கு உரிய நிர்வாக உரிமை இல்லாதிருப்பதேயாகும். தமிழ் மொழியை தமிழனொருவன் தனது அன்றாடக் கடமைகளை ஆற்றிக்கொள்ளவும் அரசாங்க தொடர்புகளை தடையோ தாமதமோ இன்றி மேற்கொள்ளவும் வழியிருந்தால் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி சம உரிமை வழங்கப்பட்டிருந்தால் அது நடைமுறையில் செயற்படுமாகவிருந்தால் இந்த நாட்டில் இனசமத்துவம், ஒற்றுமை பேணப்பட வழியேற்படும். [ ]


ஆயுதக் கொள்வனவுக்காக இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது ரஷ்யா
[ வீரகேசரி ][ Feb 07 07:06 GMT ]

ஆயுதத் தளபாடங்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். [ ]
  » யுத்தத்துக்குப் பின்னரான உட்கட்டுமானத்துக்கு சீனா 350 மில்லியன் டொலர் நிதி உதவி - உதயன்


ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்
[ வீரகேசரி ][ Feb 06 14:26 GMT ]

இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. [ ]


சர்வதேச நாடுகளின் எந்தவித விசாரணைக்கும் நான் ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டேன் அவை அவசியமில்லை என்கிறார் கோத்தபாய
[ உதயன் ][ Feb 06 14:24 GMT ]

சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. நான் அதனை முற்றாக எதிர்க்கிறேன். ஏனெனில் அவ்வாறான விசாரணைக்கு இங்கு எந்த அவசியமும் இல்லை. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பி.பி.ஸி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். [ ]


தமிழர்களின் வீடுகளை உடைத்து பொருட்களை சூறையாடும் சிங்களர்கள்: விவசாய நிலங்களும் ஆக்கிரமிப்பு
[ மாலை மலர் ][ Feb 05 11:39 GMT ]

இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு தமிழ் இன அழிப்பு வெகுவேகமாக நடந்து வருகிறது. கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகள் மெல்ல, மெல்ல சிங்கள பூமியாக மாறி வருகிறது. கடந்த மாதங்களில் மல்லாவி, கனகராயன்குளம், துணக்காப் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளை இடித்து எல்லா பொருட்களையும் அள்ளிச் சென்றுவிட்டனர். [ ]


வடக்கு - கிழக்கு மக்களைப் பலப்படுத்த கிராமிய மட்டத்துக்கு அதிகாரப் பகிர்வுசுதந்திரதின உரையில் ஜனாதிபதி அறிவிப்பு
[ உதயன் ][ Feb 05 11:35 GMT ]

கிராமிய மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் நிலையைத் தாம் பலப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித் திருக்கிறார். உலக நாடுகளை இலங்கை பற்றிய அபிப்பிராயத்தைத் திருத்திக் கொள்ளுமாறு இந்த உரையில் கோரியுள்ள ஜனாதிபதி, புதிய சர்வதேச உறவு குறித்தும் நம்பிக்கையும் வெளியிட்டார். [ ]
  » வடக்கு, கிழக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் - வீரகேசரி


மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?
[ உதயன் ][ Feb 09 02:28 GMT ]

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிக் கருத்து வெளியிட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், தமிழ் மக்கள் மனம் குழம்பிய நிலையில் இருக்கும்போது அவர்கள் மீது அடுத்தடுத்து தேர்தல்கள் திணிக் கப்படுவதாகத் தெரிவித்து விசனம் வெளியிட்டிருக்கின்றார். பத்மினி அம்மா உட்படப் பல தமிழ்த் தலைவர்களே தமிழ் அரசியல் விவகாரத்தில் குழம்பிய நிலை யில் இருக்கின்றனர் என்பதுதான் ஸ்ரீமான் பொதுஜனத்தின் கணிப்பாகும். [ ]


பொன்சேகா கைது: இலங்கையில் ராணுவம் உஷார்
[ நக்கீரன் ][ Feb 09 02:12 GMT ]

இலங்கை அதிபர் ராஜபக்சேயை கொல்ல முயன்றதாக ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா திடீரென கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொன்சேகா, ராணுவ தலைமை தளபதி பதவி வகித்தவர் என்பதால், அவர் மீதான விசாரணையை ராணுவ கோர்ட்டில் நடத்தலாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் இலங்கை அரசு ஆலோசனை நடத்தியது. [ ]


தேர்தல் குறித்து வார இறுதியில் ததேகூ கலந்தாலோசனை
[ வீரகேசரி ][ Feb 08 11:05 GMT ]

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தவார இறுதியில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. [ ]
  » ஆளும் கட்சியிலோ,எதிர்கட்சியிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை:சிவாஜிலிங்கம் - வீரகேசரி


இன்னொரு தேர்தல் திருக்கூத்து
[ உதயன் ][ Feb 08 11:02 GMT ]

மக்களின் எண் ணத்தைப் பிரதிபலிக்கும் நியாயமான நாடாளுமன்றம் ஒன்று உருவானாலும் அது ஜனநாயக விழுமியங்களின் அடிப்படை யில் நீதி,நியாயமாகச் செயற்படும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு இன்னும் ஏற்படவேயில்லை. அதுதான் உண்மை. கடந்த கால அரசியல் பட்டறிவு அனுபவம் அத்தகைய அவநம்பிக்கை எண்ணத்தையே மக்கள் மனதில் ஆழ விதைத்து நிற்கின்றது. [ ]


உலகில் வாழும் தமிழர்கள் தம்மை பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும்
[ உதயன் ][ Feb 07 07:17 GMT ]

உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சிங்கப்பூரைச் சேர்ந்த சிவகாமிதேவி மேற்கண்டவாறு தெரிவித்தார். சென்னையில் நேற்று ஆரம்பமான உல கத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற் றுகையிலேயே அவர் இப்படிக் கூறினார். [ ]


வன்னியில் மதவழிபாட்டு தலங்கள் அனைத்தும் முற்றாக அழிந்துள்ளன-யாழ்.மறைமாவட்ட ஆயர்
[ வீரகேசரி ][ Feb 07 07:05 GMT ]

வன்னியில் தான் பயணம் செய்த பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலங்கள் மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் மருத்து வமனைகள் போன்ற இடங்கள் கடும் சேதமாகியுள்ளதாகவும் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். [ ]
  » வன்னி மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது போர்ப் பேரழிவுஅங்கு சென்று திரும்பிய யாழ்.ஆயர் விசனம் - உதயன்


அரசியல் தீர்வு வேண்டும் என்பதைத் தமிழ் மக்கள் தேர்தல் மூலம் உணர்த்திவிட்டனர் : அரியநேத்திரன்
[ வீரகேசரி ][ Feb 06 14:25 GMT ]

"தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். [ ]


11 ஆயிரம் புலிச் சந்தேக நபர்களையும் இன்னும் கூட சந்திக்க முடியாத நிலைமை மனிதாபிமான அமைப்புகள் விசனம்
[ உதயன் ][ Feb 05 11:40 GMT ]

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப் படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு 2009 ஜூலை மாதத்திற்குப் பின்னர் தாங் கள் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. [ ]


பொன்சேகாவின் மருமகன் மருத்துவமனையில் அனுமதி
[ தினமணி ][ Feb 05 11:36 GMT ]

ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியது தொடர்பான விவகாரத்தில் திலகரத்னவுக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டதால், அவரிடம் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தவிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. [ ]


யோசித ராஜபக்ஷவும் ராஜினாமா செய்யவேண்டும்:ஐ.தே.க
[ வீரகேசரி ][ Feb 05 11:31 GMT ]

அரசியலில் ஈடுபட்ட 14 இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அரசு வழங்குமானால் ஜனாதிபதியின் புதல்வர் யோசித ராஜபக்ஷவும் ராஜினாமா செய்யவேண்டும் என ஐ.தே.க தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். [ ]
  » தப்பிச்சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்:இராணுவப் பேச்சாளர் - வீரகேசரி