Wednesday - 14th of May 2008

Home | About Us | Suggest this page | Feedback

Amparai
Batticaloa
Jaffna
Kilinochchi
Mannar
Mullaitivu
Puttalam
Trincomalee
Vavuniya
In Tamil
       TamilCanadian News Archives
» தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் முயற்சிகளையே அரசாங்கம் மேற்கொள்கின்றது - சபையில் மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு
   [ May 06, 2008 21:32:19 GMT ] [ வீரகேசரி ]

    சமாதான வலயங்களை உருவாக்குவதற்கு பதிலாக தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், [ Full Report ]

» கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபர் உறுதி
   [ May 06, 2008 3:51:34 GMT ] [ வீரகேசரி ]

    பல்வேறு வேலைகளின் நிமித்தம் கொழும்புக்கு வரும் தமிழர்கள், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் உறுதியளித்துள்ளார். கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது. [ Full Report ]

» ஜெயந்தன் படையணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?: சிறப்புத் தளபதி கீர்த்தி விளக்கம்
   [ May 06, 2008 3:46:46 GMT ] [ புதினம் ]

    மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களையும் ஒட்டுக்குழுவினரையும் சேர்த்து ஒரு பித்தலாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் விரைவாகப் பதில் சொல்வோம். பிள்ளையான் என்னும் விளக்கமில்லாத ஒட்டுக்குழுவை வைத்து சிறிலங்கா அரசு தமிழ் மக்களையும் அனைத்துலக நாடுகளையும் பேய்க்காட்டிக்கொண்டு இருக்கின்றது. [ Full Report ]

» சிறிலங்காவின் கவசப்படையை எமது கவசப்படையாக மாற்றுவோம்: கேணல் தீபன்
   [ May 04, 2008 15:52:18 GMT ] [ புதினம் ]

    சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாம் மாற்றுவோம் என்று வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். முகமாலையில் களமுனைப் போராளிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி வாழ் மக்கள் சமைத்த உணவு, உலர் உணவு, குளிர்களி என்பவற்றை வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: [ Full Report ]

» இந்தியா 400 கோடி ரூபாவை இலங்கைக்கு ஆயுதம் வாங்க வழங்கியிருப்பதால் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்-பழ. நெடுமாறன்
   [ May 04, 2008 6:22:18 GMT ] [ வீரகேசரி ]

    இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். [ Full Report ]

» பதவிக்காலம் முடிய முன்னர் யுத்தத்திற்கு முடிவு காண்பேன் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா
   [ May 04, 2008 4:48:28 GMT ] [ வீரகேசரி ]

    தமது பதவிக்காலம் முடியும் முன்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இருபத்து ஐந்து வருட காலமாக உள்ள புண்ணை ஒரேயடியாக குணமாக்க முடியாது என்றும் அவர் கூறி யுள்ளார். இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வாராந்த பத்திரிகை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே இதனை கூறி உள்ளார். அவர் அச் செவ்வியில் மேலும் கூறியதாவது, முகமாலையில் நடந்த மோதலில் எமக்கு பின்னடைவு எதுவும் ஏற்படவில்லை. [ Full Report ]

» போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம்உண்மைகளை மறைக்க முயல வேண்டாம்முதல்வருக்கு வேண்டுகோள்- பழ. நெடுமாறன்
   [ May 03, 2008 11:47:17 GMT ] [ தென் செய்தி ]

    தமிழக சட்டமன்றத்தில் இலங்கை இனப் பிரச்னை குறித்து பா. ம. க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளி களுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. [ Full Report ]

» இலங்கையில் மனித உரிமைமீறல்களின் விளைவு
   [ May 03, 2008 11:45:55 GMT ] [ தென் செய்தி ]

    அண்மைக் காலங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறுபட்ட கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அரசு கட்டுப்படுத்த தவறிவிடுகின்றது என்ற வகையில் அமைந்திருந்த கண்டனங்கள் இப்போது அரசு - அரசபடைகளுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன என்று மாற்றம் பெருமளவுக்கு உலகம் உண்மையை உணர ஆரம்பித்துவிட்டது. [ Full Report ]

» இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
   [ May 03, 2008 11:41:53 GMT ] [ தினக்குரல் ]

    இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகஇலங்கையரசுக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு பின்னணியாகவிருந்து சோனியா காந்தி இயக்க, தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறம்பட நடித்துள்ளதாக இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரட்டை வேடம் போட்டு வருகின்றனர் என்று இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளதுடன் இலங்கை பிரச்சினைக்கு இந்திய அரசு இராணுவ உதவி கொடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். [ Full Report ]

» ஆனையிறவிற்கான விலை!
   [ May 03, 2008 1:47:43 GMT ] [ வெள்ளிநாதம் ]

    கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெற்றியை உறுதிப்படுத்திய தாக்குதல்களைத் திட்டமிடும்படி முப்படைத் தளபதியும் சனாதிபதியுமான மகிந்த ராஜபச்க முப்படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. [ Full Report ]

» இலங்கையில் இந்திய தலையீடு சாத்தியமா?
   [ May 02, 2008 22:26:18 GMT ] [ பிபிசி தமிழோசை ]

    இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை சமீபகாலமாக தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான செய்திகள் மற்றும் ஆய்வுகள். இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண் டும் என்கிற கோரிக்கை சமீபகாலமாக தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்கள், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையில் சமாதான பேச்சுக்களை துவக்குவதில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கோரியி ருந்தார். [ Full Report ]

» இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கபடும்!ஜப்பான்-ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு அறிக்கை
   [ May 02, 2008 13:45:05 GMT ] [ வீரகேசரி ]

    இலங்கை இனபிரச்சினை தீர்வுக்கு, அரசியல் அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், அங்குள்ள மனித உரிமை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.டோக்கியோவில் கடந்தவாரம் நடைபெற்ற ஜப்பான்-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டு முடிபில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது. [ Full Report ]

» கருணா பிரிவினர் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு, முக்கிய தலைவர்களை கடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுப்பிரிவு எச்சரிக்கை
   [ May 01, 2008 11:03:10 GMT ] [ தினத்தந்தி ]

    இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப்புலிகள் மீது இந்த பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை தகவலை யொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். [ Full Report ]

» மனித நேய மகுடங்கள்! - சோலை
   [ Apr 30, 2008 12:47:35 GMT ] [ குமுதம் ரிப்போர்ட்டர ]

    மனிதநேயத்தின் கொடுமுடியாக அன்னை சோனியா காந்தி உயர்ந்து நிற்கிறார். பழிவாங்கும் உணர்வு, கோபம், குரோதம் ஆகியவை இடம் பிடிக்க முடியாத இதயம் படைத்தவர். கையகல அதிகாரம் வந்தாலே குதியோ குதியென்று குதிப்பவர்களைப் பார்க்கிறோம். வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் நளினியை சோனியாவின் புதல்வி பிரியங்கா சந்தித்தார். அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறினார். [ Full Report ]

» புலிகளைப் பலவீனப் படுத்தினால் அது வரலாற்றுத் தவறாகி விடும்! - இலங்கை தமிழ் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பேட்டி
   [ Apr 30, 2008 12:42:24 GMT ] [ குமுதம் ரிப்போர்ட்டர் ]

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்றே முக்கால் மணி அளவில் புலிகளின் வான்படைப்பிரிவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்று, இலங்கை ராணுவ முகாம் இருந்த மணலாற்றுப்பகுதியில் குண்டு வீச்சு நடத்தி விட்டுத் திரும்பியுள்ளன. இந்தச் சூழலில், புலிகளின் தலைமையகமும் பிரபாகரனின் இருப்பிடமும் கொண்ட வன்னித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் சென்னை வந்திருந்தார். இவர் சிறீ சபாரத்தினத்தின் ‘டெலோ’ இயக்க ராணுவத் தளபதியாக இருந்தவர். சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு இப்போது டெலோ இயக்கத் தலைவர் பொறுப்பை வகிப்பதோடு வன்னித் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். அவரைச் சந்தித்தோம். [ Full Report ]

» மணலாறில் புலிகள் எறிகணை வீச்சு
   [ Apr 30, 2008 11:01:54 GMT ] [ வீரகேசரி ]

    மணலாறு, வெலிஓயா பகுதி மீது புலிகள் இன்று காலை 9.30 மணிஅளவில் எறிகணை வீச்சு நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.எறிகணை வீச்சில் 66 வயதுடைய சிவிலியன் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [ Full Report ]

» இலங்கையில் சமாதானப் பேச்சுக்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்
   [ Apr 30, 2008 10:58:08 GMT ] [ தினக்குரல் ]

    இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கு பாரிய பங்களிப்பினை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் வழங்கவேண்டுமென இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா அழைப்பு விடுத்திருக்கிறது. இலங்கை அரசையும் விடுதலைப்புலிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசாங்கம் பாரிய பங்களிப்பை வழங்க வேண்டுமென பாரதிய ஜனதாவின் தலைவர் ராஜ்நாத்சிங் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். [ Full Report ]

» சர்வதேச ரீதியில் இலங்கை ஓரங்கட்டப்படும் ஆபத்து
   [ Apr 30, 2008 10:55:08 GMT ] [ சுடர் ஒளி ]

    இலங்கை அரசு எந்தவிதமான ஜனநாயக விதிமுறைகளையும் மதிப்பதில்லை. அது பயங்கரவாதிகளைப் போன்று செயற்படுகின்றது. ஜனநாயக விதிமுறைகளை அரசு மதிப்பதில்லை என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. இதேசமயம், தெளிவான வெளிநாட்டுக் கொள்கையின்றி, சர்வதேச உறவு விடயங்களையும் அரசு குழப்பியடித்து வருகின்றது. இதனால் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு பேரிடர்களைச் சந்திக்கும் அபாயத்துக்குள் ஆபத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்கிறார் ரவி கருணாநாயக்க. [ Full Report ]

» இலங்கையில் மனித நேயப் பணிகளுக்காக ஐ.நா 850 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
   [ Apr 30, 2008 10:49:41 GMT ] [ பதிவு ]

    மனிதநேயப் பணிகளை இலங்கையில் மேற்கொள்ள 850 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி நெகில் புகுனே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறீலங்காவில், அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு என அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என இந்த நிதி ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்டுள்ளது. [ Full Report ]

» இலங்கை ஈரான் உறவு தொடர்பில் அமெரிக்கா கவலை
   [ Apr 29, 2008 20:52:27 GMT ] [ வீரகேசரி ]

    இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுவரும் நெருக்கம் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொம் கஸி, ஈரானிய ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் குறித்து நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். [ Full Report ]

Next Page