| TamilCanadian News Archives |
» அரசியல் யாப்பு சீர்திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்
[ Aug 30, 2010 10:01:23 GMT ] [ வீரகேசரி ]
அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்ட மூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் மாகாண சபை அதிகாரங்களை மீளமைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. [ Full Report ]
|
» ஐ.நா. குழுவின் விசாரணை முயற்சிக்கு மத்தியிலும் ஜனாதிபதி ஐ.நா. பயணம்
[ Aug 30, 2010 10:00:48 GMT ] [ வீரகேசரி ]
அடுத்த மாதம் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் சபைக் கூட்டத் தொடர்களில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் செல்ல இருக்கும் இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைதாங்க இருக்கிறார். வர்த்தகம், கைத் தொழில் ஆகிய துறைகளை சேர்ந்த தலைவர்களும் ஜனாதிபதியுடன் இந்த விஜ யத்தில் கலந்து கொள்வார்கள். [ Full Report ]
|
» இனப்பிரச்சினை முடக்கப்படும்
[ Aug 30, 2010 9:58:29 GMT ] [ உதயன் ]
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இழுத்தடித்து, அந்த இடைவெளியில், ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்தப் பூமி என்று உரிமை கொண்டாடும் பிர தேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் அவற் றுக்குப் பக்கபலமான நடவடிக்கைகளை மேற்கொள் வது அரசின் பிரதான திரைமறைவு மூலோபாயங் களில் ஒன்று. [ Full Report ]
|
» இந்திய அரசின் 50ஆயிரம் வீடமைப்புத் திட்டம்; பயனாளிகளின் தெரிவு இலங்கை அரசாங்கத்திடம்! நிர்மாணப் பணிகள் மும்பாய் நிறுவனத்திடம்
[ Aug 29, 2010 12:53:57 GMT ] [ உதயன் ]
இலங்கையில் வடக்கில் இந்திய அரசு அமைக்கவுள்ள 50ஆயிரம் வீடுகளின் அமைவிடம், காணி உரிமை ஆகியன தொடர்பான முடிவை இலங்கை அரசே மேற்கொள்ளும். இந்தியத் தூதரக வட்டாரங்கள் இத் தகவலை வெளியிட்டுள்ளன. வடக்கில் அமைக்கத் திட்டமிட்டுள்ள 50ஆயிரம் வீடுகளையும் இந்தியாவின் மும்பாய் கட்டடத் திணைக்களம் பொறுப் பேற்றுள்ளது. [ Full Report ]
|
» விடுதலைப்புலிகள் மீதான தடை : பாஜக கடும் எதிர்ப்பு
[ Aug 29, 2010 5:04:50 GMT ] [ குமுதம் ]
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவில் நீட்டிப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு மீது கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீட்டிப்பு தேவைதானா என்பது குறித்து அறிய, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்சிங் குப்தா தலைமையில் பொது விசாரணை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. [ Full Report ]
|
» யாழ்ப்பாணத்துக்கு வரலாமா? - வெளிநாட்டிலிருந்து குவியும் தொலைபேசி அழைப்புக்கள்
[ Aug 28, 2010 4:35:38 GMT ] [ வலம்புரி ]
யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [ Full Report ]
|
» யுத்தம் முடிந்தும் பல கேள்விகளுக்குப் பதிலில்லை : ஜோன் ஹோம்ஸ்
[ Aug 27, 2010 9:42:23 GMT ] [ வீரகேசரி ]
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். [ Full Report ]
|
» மீள்குடியேறியுள்ள மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகள் தேவை - ஐ.நா. பிரதிநிதி நீல் பூனே கோரிக்கை
[ Aug 27, 2010 9:35:53 GMT ] [ வலம்புரி ]
இலங்கை யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குமாறு நன்கொடைகள் வழங்குவோரை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியும் மனிதாபிமான இணைப் பாளருமான நீல் பூனே கோரியுள்ளார். இன்னும் பல முக்கியமான வேலைகள் செய்யப்பட இருப்பதால் இதற்கு உங்கள் உதவி தேவை எனவும் அவர் கூறியுள்ளார். [ Full Report ]
|
» மட்டக்களப்பிலிருந்து இளம் பெண்களை தென் பகுதிக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி உரிய தருணத்தில் தடுக்கப்பட்டது
[ Aug 26, 2010 9:58:46 GMT ] [ உதயன் ]
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைத் துச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப் பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதா கக் கூறி ஆடைத் தொழிற்சாலை நிறுவ னங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட் டக்களப்பு மாவட்ட எம்.பி. பா.அரியநேந் திரனின் ஏற்பாட்டில் அது தடுக்கப்பட் டது. [ Full Report ]
|
» கடந்தகால தவறுகளுக்கு சகல தரப்பும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்:ஜயந்த தனபால
[ Aug 26, 2010 9:50:06 GMT ] [ வீரகேசரி ]
கடந்தகால தவறுகள் மற்றும் இன நெருக்கடிக்கு காரணமாகவிருந்த மோசமான ஆட்சி முறைகள் தொடர்பில் நாட்டின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான பொறுப்பு என்ற அடிப்படையில் நாட்டு மக்களிடம் ஒருமித்த மன் னிப்புக் கோரவேண்டும். [ Full Report ]
|
» எதிர்வரும் டிசெம்பர் மாத முடிவுக்குள் வன்னியில் மீள்குடியேற்றம் பூர்த்தியாகும் புதுடில்லியில் வைத்து பஸில் வாக்குறுதி
[ Aug 26, 2010 9:46:52 GMT ] [ உதயன் ]
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எஞ் சிய தமிழர்கள் அனைவரும் இந்த வருடத்திற் குள் (அதாவது டிசம்பர் மாதமுடி வுக்குள்) மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனப் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [ Full Report ]
|
» சுட்டுக்கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை புதைக்க வழின்றி பருந்துகள் கொத்திதின்றன:தா.பாண்டியன்
[ Aug 25, 2010 9:50:46 GMT ] [ நக்கீரன் ]
40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். 2-வது உலகப் போரை விட இது கொடூரமானது. ஆயுதம் வழங்கப்படும் இந்திய ராணுவ படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம்’’என்று தெரிவித்தார். [ Full Report ]
|
» பத்மநாதனுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ
[ Aug 25, 2010 9:48:52 GMT ] [ நக்கீரன் ]
தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார். [ Full Report ]
|
» ஐ.நாவுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா
[ Aug 25, 2010 9:43:10 GMT ] [ தமிழ் மிரர் ]
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது புதிய பதவியை விரைவில் பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன. [ Full Report ]
|
» கேபி கூறுவதெல்லாமே வடிகட்டிய பொய் : வைகோ
[ Aug 25, 2010 9:36:39 GMT ] [ வீரகேசரி ]
"இலங்கைத் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட துரோகப்படலத்தின் தொடர்ச்சியாக, தற்போது குமரன் பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசின் கைக்கூலியாக இருந்து தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்கிறார். அவர் சொல்வது அனைத்தும் வடி கட்டிய பொய்" என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. [ Full Report ]
|
» கனடா வந்தவர்கள் கடத்தல்களை மேற்கொள்ளவில்லை : பாதுகாப்புப் பிரிவு
[ Aug 25, 2010 9:32:01 GMT ] [ வீரகேசரி ]
எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்துள்ளோர் எவ்வித கடத்தல்களையும் மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அகதிகள் அந்தஸ்து கோரியே கனடாவுக்கு வந்துள்ளதாக ரோயல் கனடா மொமன்ட் பொலிஸ் அதிகாரி மைக்கல் மேக்லகேன் தெரிவித்துள்ளார். [ Full Report ]
|
» விசேட தூதுவரை அனுப்புவது குறித்து கொழும்புக்கு டில்லி அறிவிக்கவில்லை
[ Aug 24, 2010 9:39:33 GMT ] [ தினக்குரல் ]
இந்திய பிரதமரின் விசேட தூதுவரது விஜயம் தொடர்பாக புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை எனத் தெரிவித்த அரசாங்கம்,இதேவேளை இலங்கையின் மூவரடங்கிய தூதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது. [ Full Report ]
|
» மீளக் குடியேற்றம்...! விடை யாரிடம்?
[ Aug 24, 2010 9:35:42 GMT ] [ உதயன் ]
மனிதநேயமோ மனிதாபிமானமோ இன்றி அவர்களின் ஆத்மாவைச் சிதைத்து வதைப்பது அரசாங்கத்துக்குத் தகுமா? வன்னிப் பிரதேசத்தில், தனது தமிழர் விரோத நிகழ்ச்சி நிரலை பூர்த்தியாக்கும் வரை மீளக் குடி யேற்றத்தை இழுத்தடிக்கும் உத்தியை அரசு கையில் எடுத்துள்ளதா? வன்னி மக்கள் இதற்கான விடையை யாரிடம் கேட்டறிவது? [ Full Report ]
|
» புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு; கேபி விளக்க வேண்டும் : முதல்வர்
[ Aug 24, 2010 9:30:13 GMT ] [ வீரகேசரி ]
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் விளக்கமளிக்கவேண்டும் என துமிழக முதல்வர் மு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. [ Full Report ]
|
» சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 200 மில்.அமெ.டொலர் கடனுதவி
[ Aug 24, 2010 9:28:05 GMT ] [ வீரகேசரி ]
200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான பொருளாதார ஸ்திரத்தன்மை நாட்டில் தற்போது காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட நிதியத்தின் ஆசிய பிராந்திய அதிகாரி பிரைன் எயிட்கன் கடன் வழங்குவது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார். [ Full Report ]
|
|
| Next Page |